×

சென்னங்காரணி கிராமத்தில் ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி: உடனே அகற்ற கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை  அருகே சென்னங்காரணி கிராமத்தில் பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே சென்னங்காரணி ஊராட்சி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் வசதிக்காக 25 வருடங்களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், தற்போது அதன் தூண்கள் சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உடைந்து, கம்பிகள் வெளியே தெரிந்து எலும்பு கூடுபோல் காட்சியளிக்கிறது. இந்த குடிநீர் தொட்டி  எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, “சென்னங்காரணி  கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதை அகற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராம சபை கூட்டத்திலும் கோரிக்கை வைத்துள்ளோம். உடனே பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டாவிட்டால்  போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

Tags : village ,removal ,Chennankarani ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...