×

பள்ளம் தோண்டும்போது 1000 ஆண்டுகள் பழமையான சாமி சிலை கண்டெடுப்பு

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் வீட்டின் வளாகத்தில் பள்ளம் தோண்டும்போது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சாமி  சிலை கண்டெடுக்கப்பட்டது.
மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே அரசர் கோவில் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோயில்,  பாலாற்றங்கரையோரம் உள்ளது. இந்த கோயிலின் பின் பகுதியில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் வீடு கட்டி வசிக்கிறார். மேலும் தற்போது, அந்த பகுதியில் கட்டிடம் கடட் திட்டமிட்டார்.

இந்நிலையில், நேற்று காலை வீடு கட்டுவதற்காக, பள்ளம் தோண்டும் பணியில் ெதாழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, மணலில் கல்லால் ஆன சாமி  சிலை இருப்பது தெரிந்தது. இதையறிந்ததும், ஏராளமான கிராம மக்கள் அங்கு சென்று சிலையை பார்வையிட்டனர். தகவலறிந்து மதுராந்தகம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜீவா, மேலாளர் வீரராகவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை என தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், சிலையை மீட்டு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.

Tags : Sami ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...