×

வாலிபர் தற்கொலை

ஆவடி: திருமுல்லைவாயல் கணபதி நகர் கன்னிமூல கணபதி தெருவை சேர்ந்தவர் தேவி(45). இவரது கணவர் ஏழுமலை இறந்து விட்டார். இவர்களது மகன் தமிழரசு(20). எலக்ட்ரீஷியன். குடிப்பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் இரவு தமிழரசு தேவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், தேவி இரவு 9 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது தமிழரசு வீட்டின் முன் அறையில் தாயின் புடவையால் தூக்கில் தொங்கினார். அக்கம்பக்கத்தினர் தமிழரசை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே தமிழரசு இறந்துவிட்டதாக கூறினர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை