×

நடத்தை சந்தேகத்தால் விபரீதம்: நள்ளிரவில் மனைவியை கொல்ல முயற்சி: தடுத்த தாய், மகனுக்கு கத்தி குத்து: கூலித்தொழிலாளி வெறிச்செயல்

ஆவடி: திருமுல்லைவாயல் பெரியார் நகர் ஜெயலிதா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(48).  கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுந்தரம்மாள்(42). இவர்களது மகன் சீனிவாசன்(19). கல்லூரி மாணவன். மேலும், இவர்களுடன் சுப்பிரமணி தாயார் இந்திரா(65) வசித்து வருகிறார். சுப்பிரமணி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, சுந்தரம்மாள் பல இடங்களில் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், சுப்பிரமணி மனைவி சுந்தரம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு வேலைக்கு செல்லக்கூடாது என எச்சரித்து வந்துள்ளார். ஆனால்,  அவர் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு தம்பதியரிடையே இதுதொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுந்தரம்மாளை சரமாரியாக குத்திக்கொல்ல முயன்றார்.

மேலும், இதனை தடுத்த தாய் இந்திரா மகன் சீனிவாசன் ஆகியோரையும் கத்தியால் குத்தினார். இதில், சுந்தரம்மாளுக்கு கழுத்து, முகம், வலது கைகளிலும், இந்திராவிற்கு வயிற்றிலும், சீனிவாசனுக்கு இடது கையிலும் சரமாரி குத்து காயம் ஏற்பட்டது.  இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி வந்தனர். பின்னர், பொதுமக்கள் மூவரையும் மீட்டு ஆவடி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.

Tags : Mercenary ,
× RELATED குழந்தை உட்பட 2 பேரை கடித்து குதறிய வெறிநாய்