×

புதுக்கோட்டை அருகே முதியவர் மர்மச்சாவு

புதுக்கோட்டை,பிப். 3: குலையன்கரிசல் பட்டை குளத்தில் 70 வயது முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். குலையன்கரிசல் பெட்டை குளத்தில் நேற்று மாலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் கிடைத்தவுடன் புதுக்கோட்டை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து குளத்தில் வீசினார்களா?முதியவர் யார் எங்கிருந்து வந்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதனால் முதியவர்கொலைசெய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marmachavu ,Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...