×

கோவில்பட்டி அருகே விவசாயியிடம் செல்போன் பைக் பறித்த 3 பேர் கைது

கோவில்பட்டி, பிப். 3:  விளாத்திகுளம் அருகே கல்லூரணியைச் சேர்ந்த உத்தண்டராமன் மகன் முத்து சீதாராமன் (36). விவசாயியான இவர், கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். கோவில்பட்டி அடுத்த தெற்கு திட்டங்குளம் அருகே சென்றபோது மறித்த 3 பேர், சரமாரியாகத் தாக்கியதோடு அவரிடமிருந்து செல்போன், ரூ.2 ஆயிரம், பைக் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். புகாரின் ேபரில் வழக்குப் பதிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார், குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இதனிடையே இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையிலான போலீசார் ஒரே பைக்கில் வந்த மூவரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த பைக் முத்துசீதாராமனிடம் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த கார்த்திக் (25), ஜே.ஜே.நகர் புதுகிராமத்தை் சேர்ந்த சூர்யா(24), மாயாண்டி (25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து பைக், செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!