×

பல்வேறு கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

நெல்லை, பிப். 3:  நெல்லையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அதிமுகவில் இணைந்தனர். பாளை. தெற்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட கொங்கந்தான்பாறை ஊராட்சியை சேர்ந்த தேமுதிக கிளை செயலாளர் ஜெயசிங்மரியராஜ், அமமுக ஊராட்சி செயலாளர் மதியழகன், கிளை செயலாளர் ஜான்சன், மற்றும் சுபாஷ், ஆமோஸ், ஞானசேகர், பிலிப்புத்துறை இமானுவேல், ஜான்வில்லியம், தேவதாஸ், அந்தோணி மாசிலாமணி, ராஜகுரு, தங்கையா, அந்தோணி ஓசன்ஏசுராஜ், சாமுவேல்ராஜ், செல்லையா, ஸ்டாலின்கோயில்ராஜ், ஒகபாதியா, ஓசியா, ஆனந்த்செல்லப்பன், பாஸ்கர் மற்றும் முன்னீர்பள்ளம் ஊராட்சியை சேர்ந்த அமமுகவினர் இசக்கிபாண்டியன், வீரபத்திரன், செந்தில்குமார், கொம்பன், முருகன், ஆறுமுகம் ஆகியோர் நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த முன்னாள் இன்ஸ்பெக்டர் முருகனும் அதிமுகவில் இணைந்தார். இதற்கான ஏற்பாடுகளை பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன் செய்திருந்தார்.

Tags : parties ,AIADMK ,
× RELATED ஊட்டியில் ஒரே நேரத்தில்...