×

தியாகராஜர் ஆராதனை விழா

நெல்லை, பிப். 3:  பாளை தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் தியாகராஜ சுவாமிகளின் 174வது ஆராதனை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் சிலை, கருவறையில் இருந்து மகா மண்டபத்திற்கு எழுந்தருளலும், தொடர்ந்து ஆராதனை, பஞ்சரத்ன கீர்த்தனை, 16 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.

காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக சங்கீத வித்வான்கள், மாணவ- மாணவிகள் இசை நிகழ்ச்சியை நடத்தினர். ராமர் கோயிலில் இருந்து சீதாபிராட்டி, லட்சுமணப்பெருமாள், ராமபிரான், ஆஞ்சநேயர் எழுந்தருளி காட்சியளித்தனர்.

Tags : Thiyagaraja Worship Ceremony ,
× RELATED தியாகராஜர் ஆராதனை விழா