×

நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப்.3: நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதிய சங்கத்தின் சார்பில்,நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்,புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹7850 வழங்க வேண்டும். அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குப்புசாமி,மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Pensioners ,Namakkal ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...