×

திருச்செங்கோட்டில் மல்யுத்தப்போட்டி

திருச்செங்கோடு, பிப்.3: மாநில அளவிலான கை மல்யுத்தப்போட்டி முதன் முதலாக திருச்செங்கோடு கொங்கு சமுதாயக்கூடத்தில் நடந்தது. நாமக்கல் மாவட்ட கை மல்யுத்த சங்க தலைவர்  நல்லகுமார் வரவேற்றார். தமிழ்நாடு தலைவர் டாக்டர் சுரேஷ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் இளங்கோவன் போட்டிகளின் விதிமுறைகள் குறித்து பேசினார்.மாவட்ட பொதுச்செயலாளர் சிந்தியா பாபு முன்னிலை வகித்தார். இதில் 12 மாவட்டங்களில் இருந்து பல்வேறு வரையிலான வீரர்கள், வீராங்கனைகள் 150 பேர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொழிலதிபர்கள் பரந்தாமன், டாக்டர் பாலசுப்ரமணியம், குணசேகரன், மாவட்ட தமாகா தலைவர் செல்வகுமார், குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். போட்டியில் தமிழ்நாடு காவல்துறையினர் அதிக வெற்றிகளை பெற்று சாதனை படைத்தனர்.

Tags : Wrestling match ,Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்