×

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை

தர்மபுரி, பிப்.3: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி புதிய சிவசுப்ரமணியசுவாமி கோயில் தைப்பூச விழாவில் பங்கேற்ற, திருத்தொண்டர்கள் சபையின் நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள 5 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்க நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ண்டறியப்பட வேண்டிய 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் குறித்து நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாப்பாரப்பட்டி புதிய சிவசுப்ரமணிய சுவாமிகோயிலுக்கு சொந்தமான, 100க்கணக்கான கோடி மதிப்புள்ள நிலங்கள் உள்ளன. கோயில் சொத்துக்கள் அனைத்தும், முழுமையாக கோயில் வசம் கொண்டு வரப்படும். எந்த ஒரு கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பறிபோயிருந்தால், எங்களை தொடர்பு கொண்டால் அதை மீட்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேட்டியில் கூறினார்.

Tags : temple lands ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...