×

அண்ணாவின் 52வது நினைவு நாள் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று அமைதி ஊர்வலம் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை

திருச்சி, பிப்.3: திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ளஅறிக்கை,:திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 52ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருஉருவ சிலைக்கு இன்று (புதன்) காலை 8.00 மணியளவில், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகம், வி.என். நகரில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு அமைதி ஊர்வலம் சென்று, காலை 8.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட உள்ளது. அதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள்,  முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Anna ,Remembrance Day Southern District ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்