×

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

பொன்னமராவதி, பிப். 3: திண்டுக்கல்லை சேர்ந்தவர் ராம.சாத்தப்பன். இவரது மகன் ராமநாதன்(11). 5ம் வகுப்பு படித்து வந்தான். பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு ராமநாதன் வந்தான். அங்கு விளையாட சென்ற ராமநாதனை காணாமல் தாய் தேடியுள்ளார். அப்போது அங்குள்ள குளத்தில் யாரோ மிதப்பதாக மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது குளத்தில் மூழ்கியது ராமநாதன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை மீட்டு வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : pool ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்