×

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை கணவர் - உறவினர்கள் தலைமறைவு சப் கலெக்டர் விசாரணை தொடக்கம்

திங்கள்சந்தை, பிப்.3:  வில்லுக்குறி அருகே இளம்பெண் தற்கொலை சம்பவத்தில், அவரது கணவர் குடும்பத்தினர் சிலர் திடீர் தலைமறைவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் அடுத்த வில்லுக்குறி மணக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ரெதீஸ்குமார் (26). கொத்தனார். இவரது மனைவி ஜெனிசா (22). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இருந்து கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், ஜெனிசாவை, ரெதீஸ்குமார் கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஜெனிசாவின் தாயார் குமாரி தனது மகளை அழைத்து சென்றார். அதன் பின்னர் இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ரெதீஸ்குமாரின் உறவினர்கள் சிலர் ஜெனிசாவின் வீட்டுக்கு சென்று அவரது தாயார் குமாரி மற்றும் அவரது உறவினர்களை தாக்கி உள்ளனர். தனது கண் எதிரிலேயே தாய் மற்றும் உறவினர்களை தாக்கியதால் மனம் உடைந்த நிலையில் இருந்த ஜெனிசா நேற்று முன்தினம் மதியம் தூக்கு போட்டு தற்ெகாலை செய்தார்.
இது குறித்து அறிந்ததும் இரணியல்  இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.வீட்டில் நடந்த சோதனையில் ஒரு கடிதம் சிக்கி உள்ளது. ெஜனிதா எழுதி இருந்த அந்த கடிதத்தில் சிறு வயதில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். திருமண வாழ்க்கையும் இப்படி ஆகி விட்டது. எனக்கு நிம்மதி இல்லை. நான் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன். என்னை எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமைப்படுத்தினர் என கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.  ஜெனிசாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இதற்கிடையே திருமணமான சுமார் ஒன்றரை வருடங்களில் ஜெனிசா தற்கொலை செய்திருப்பதால், பத்மநாபபுரம் சப் கலெக்டரும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளார். ஜெனிசாவின் தாயார் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது ரெதீஸ்குமார் குடும்பத்தினர் 4 பேர் வந்து தகராறு செய்து தாக்கியதுடன், கணவர் வீட்டில் மிகப்பெரிய சித்ரவதையை ஜெனிசா அனுபவித்து வந்தார் என கூறி உள்ளனர். அவர்களின் வாக்கு
மூலத்தை, உதவி கலெக்டர் சரண்யா அறி பதிவு செய்துள்ளார். இதற்கிடையே ஜெனிசாவின் கணவர் மற்றும் உறவினர்கள் 4 பேர் திடீரென தலைமறைவாகி உள்ளனர். அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Tags : suicide ,relatives ,Iraniyal ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை