×

காளைகள், காளையர்கள் தீவிர பயிற்சி 7ம் தேதி அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு

சின்னமனூர், பிப்.3: அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஏழைகாத்தம்மன், வல்லடிகார சுவாமிகள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் தை மாதத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா நடத்துவது வழக்கம். விழாவில் பாலமேடு, அலங்காநல்லூர் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வாடிவாசல், கேலரிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை தேனி டி.ஆர்.ஓ ரமேஷ், தாசில்தார், ஆர்.டி.ஓ உள்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேனி மாவட்ட மாவட்ட கண் காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி அய்யம்பட்டிக்கு வந்து ஜல்லிக்கட்டு இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பாக நடத்திட வேண்டும்  என அறிவுறுத்தி சென்றார்.

Tags : Ayyampatti Jallikattu ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ