×

மத்திய அரசை கண்டித்து போராட்டம்

பரமக்குடி, பிப்.3: பரமக்குடியில் தாய் தமிழர் கட்சியின் சார்பாக தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராசு.கணேசன் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட செயலாளர் பாரத், மதுரை மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். மீனவர்களை கொன்ற இலங்கை மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், கச்சத் தீவை மீட்கவும் ,தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன் பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...