×

நில ஆவண வரைவாளர் பணியிடம் நிரப்ப வழக்கு அரசு செயலர்களுக்கு நோட்டீஸ்

மதுரை, பிப். 3: நில ஆவண வரைவாளர் பணியிடத்தை நிரப்பக் கோரிய வழக்கில் அரசு செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, மேலஅனுப்பானடியைச் சேர்ந்த முத்துராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் தாலுகா அலுவலகங்கள் மூலம் பட்டா மாறுதல், நில அளவீடு மற்றும் உட்பிரிவு செய்தல், கணினி திருத்தம், பட்டா மாறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. 307 தாலுகா அலுவலகங்களில் காலியாக உள்ள 157 வட்ட ஆவண வரைவாளர் பணியிடங்களை, வரைவாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்ப வேண்டும்.

 இதேபோல், வரைபட உதவியாளர், நில அளவை வரைவாளர், நில வருவாய் அளவையாளர் மற்றும் முதுநிலை அளவையாளர் உள்ளிட்ட பல பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால் பணிகள் பெரிதும் பாதித்துள்ளன. பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பணியை செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்புமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனு குறித்து வருவாய்த்துறை முதன்மை செயலர், நில அளவைத்துறை இயக்குநர், நில நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17க்கு தள்ளி வைத்தார்.

Tags : Secretaries of State ,
× RELATED டிசம்பர் மாதம் மட்டும் உதவி...