×

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கல்யாணராமனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப். 3: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் நேற்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகத்தை, பா.ஜ. மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில்  தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் நேற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு தலைவர் சுலைமான், மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் பரீத் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசிவரும் பா.ஜ. மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,arrest ,Kalyanaraman ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...