×

பணம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஏலச்சீட்டு நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர், பிப். 3: திருப்பூர் மங்கலம் ரோட்டில் குமரன் கல்லூரி எதிரே தனியார் ஏலச்சீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மங்கலம் சாலை, இடுவம்பாளையம், எஸ்.ஆர்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வாரந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீட்டு எடுத்தவர்கள் யாருக்கும் இந்நிறுவனம் பணத்தை தராமல் இழுத்தடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் சிலர், நேற்று அந்நிறுவனத்துக்கு பணத்தை கேட்டு வந்தனர். நிறுவன நிர்வாகிகள் உரிய பதில் அளிக்காத நிலையில், நிறுவனத்தின் முன்  திருப்பூர், மங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மத்திய போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியாக இந்துசபா என்ற பெண் உள்ளிட்ட 10 பேர் மீது மத்திய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : road ,blockade ,lottery company ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...