×

2வது நாளாக தனியார் மருத்துவர்கள் உண்ணாவிரதம்

ஈரோடு, பிப். 3: ஈரோடு-பெருந்துறை ரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) சார்பில், தனியார் மருத்துவர்கள் நேற்று 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஐ.எம்.ஏ., மாவட்ட தலைவர் டாக்டர் பிரசாத் தலைமை தாங்கினார். சங்கத்தின் நிதி செயலாளர் டாக்டர் சுதாகர், முன்னாள் தலைவர் டாக்டர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒரே நாடு, ஒரே மருத்துவ முறையை கண்டித்தும், இதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் டாக்டர்களின் மருத்துவ சேவை பாதிக்காத வகையில், சிப்ட் வாரியாக பங்கேற்றதாகவும், இதேபோல் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் வரும் 14ம் தேதி வரை நடக்கும் என அங்கிருந்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags : doctors ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை