×

சாலையை சீரமைக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பிளக்ஸ் பேனர்

அந்தியூர், பிப். 3:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணமார் பாளையத்திலிருந்து ஜீவா செட் வரை ஒரு கி.மீ. தூரத்திற்கு சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தல்லை புறக்கணிப்பதாக கூறி அண்ணமார் பாளையம், ஈசப் பாறை, பெருமாள் கோவில் புதூர் பொதுமக்கள் ஊர் எல்லையில் பிளக்ஸ் பேனரை நேற்று காலை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாமணி, பொறியாளர் மற்றும் ஊராாட்சி செயலாளர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்யபோவதாக கூறிய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உடனடியாக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதயைடுத்து தேர்தல் புறக்கணிப்பு பிளக்ஸ் பேனரை அகற்றினர்.


Tags : election ,road ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...