×

வேலை கேட்டு பிஎஸ்என்எல்ஒப்பந்த தொழிலாளி மனைவி கலெக்டரிடம் மனு

திருச்சி, பிப்.2: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியின் போது இறந்த ஒப்பந்த தொழிலாளரின் மனைவி முதல்வர் நிவாரண நிதி மற்றும் வேலை கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தார். திருச்சி தென்னூர், ஜெனரல் பஜார் தெருவை சேர்ந்தவர் குணசீலன் மனைவி சியாமளா. இவர் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எனது கணவர் குணசீலன் கடந்த 25 ஆண்டுகளாக மத்திய அரசின் பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி வரகனேரி செக்கடிபஜார் பகுதியில் பிஎஸ்என்எல் இணைப்பு கேபிள் சரிபார்க்கும் பணிக்காக அங்கிருந்த மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி இறந்தார். எனது கணவரின் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு லக்சியா (10), நாராயண பரமசிவம் (4) இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரின் வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகிறேன். வறுமையில் வாடுகிறோம். குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் சிரமப்படுகிறேன். எனவே எனது கணவர் இறப்புக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் எனது வாழ்வாதாரத்துக்கு ஏதேனும் வேலைவாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : contract worker ,wife collector ,BSNL ,
× RELATED பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு