×

திருச்சியில் பிச்சை எடுத்த பெற்றோர், குழந்தைகள் உள்பட 10 பேர் மீட்பு

திருச்சி, பிப்.2:திருச்சி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர், காணாமல் போன குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் மற்றும் சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள் ஆகியோரை மீட்க ஆபரேசன் ஸ்மைல் என்ற சிறப்பு குழுவின் மூலம் மீட்டு அக்குழந்தைகளுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு அளிக்க திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம் உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா முன்னிலையில் செயல்படுத்தப்படுகிறது. அதில்
திருச்சி எஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில் திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் தலைமையில் அன்னை தெரசா டிரஸ்ட் இயக்குனர் பிரபு,  பவுண்டேசன் இயக்குனர் கிருஷ்ணா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அஷரப், குழந்தை தொழிலாளர் திட்ட மேலாளர் கவுதம் ஆகியோர் அடங்கிய குழுவினர் சமயபுரம், நெ1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.அப்போது அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்த 10 குழந்தைகளை மீட்டு ( 2 குழந்தை தொழிலாளர், 4 பிச்சை எடுத்த குழந்தைகள், 4 குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த பெற்றோர்கள்) அவர்களுக்கு மதிய உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி திருச்சி கலையரங்கம் திரையரங்க வளாகத்தில் உள்ள குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

Tags : children ,parents ,Trichy ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு