×

நெடும்பலம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

திருத்துறைப்பூண்டி, பிப்.2: திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் ஊராட்சிக்குட்பட்ட கோவில் சிங்களாந் தி, கோவில்தோப்பு, மங்களநாயகிபுரம், நெடும்பலம், வடக்கு, தெற்குதெரு உட்பட அனைத்து பகுதிகளுக்கும் திருத்துறைப்பூண்டி பகுதியிலிருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நெடும்பலத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு 22 மணி நேரம் பம்ப் செய்தால்தான் இங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரம்பும். ஆனால் கடந்த ஒரு மாதமாக 8 மணிநேரம் மட்டுமே குடிநீர் பம்ப் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே முறையாக கொள்ளிடம் குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரிய துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nedumbalam ,
× RELATED திருத்துறைப்பூண்டி நெடும்பலத்தில் 95...