×

போலீஸ் விசாரணை புறகரைப்பட்டியில் புதிதாக தொடக்கப்பள்ளி துவங்க உத்தரவு

திருமயம், பிப். 2: திருமயம் அடுத்த புறகரைப்பட்டியில் புதிதாக தொடக்கப்பள்ளி துவங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் கூறினார். திருமயம் வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருமயம் ஒன்றியம் புறகரைப்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. அந்த ஊர் குழந்தைகள் தொடக்க கல்வி கற்க 2. கிலோ மீட்டர் தூரமுள்ள குழிபிறை பள்ளிக்கு சென்றனர். இதனால் தங்களது ஊரில் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த தமிழக அரசு, நடப்பு கல்வியாண்டில் புறகரைப்பட்டியில் புதிதாக தொடக்கப்பள்ளி தொடங்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தொடங்கப்படும் பள்ளிக்கு ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளோம். தற்போது 25 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு உத்தரவால் வகுப்புகள் செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : primary school ,backyard ,
× RELATED குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து