×

சைல்டுலைன் சார்பில் குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி, பிப்.2: பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேகுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சுனன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் முத்து முன்னிலை வகித்தார். சைல்டுலைன் பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, குழந்தைகள் திருமணம், தடுப்பது, குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பினை எவ்வாறு உறுதி படுத்துவது பற்றிய நடவடிக்கைகளை 1098 சைல்டு லைன் விளக்கிக் கூறினார். இதில் அப்பகுதி பெண்கள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைப்பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் அப்துல்கை, செல்வி, கணேசன், அழகி, தேன்மொழி, ஊராட்சி செயலர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Awareness camp ,women ,children ,Skyline ,
× RELATED உலக மலேரியா தின விழிப்புணர்வு...