×

கட்டிடத்தின் உச்சியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

கரூர், பிப்.2: கரூர் வெங்கமேடு அருகே கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் வெங்கமேடு செங்குந்தர் நகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (50). பெயிண்டர். இவர், கடந்த சில நாட்களாக செங்குந்தர் நகர்ப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 30ம்தேதி அன்று கட்டிடத்தின் மேல்பகுதியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில், காயமடைந்தவர், ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Painter ,building ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை