×

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு மீண்டும் சிகிச்சை

கோவை,பிப்.3:  கோவை வரதராஜபுரத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. கோவையில் கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேகமாக இந்த மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் இங்கு இ.எஸ்.ஐ. அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி சிகிச்சை அளிக்க முடியவில்லை.இந்த நிலையில் தற்போது கோவையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது: இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொரோனாவுக்கு பிரத்தியேகமாக சிகிச்சை அளிக்க தேர்வு செய்யப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதியில் இருந்து கடந்த மாதம் வரை இ.எஸ்.ஐ. அட்டை பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. மேலும் இங்கு 665 கொரோனா படுக்கை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அதில் 100-க்கும் குறைவானவர்களே சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று குறைந்து வருவதன் காரணமாக தற்போது இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு மீண்டும் சிகிச்சை  துவங்கப்பட்டுள்ளது, என்றார்.

Tags : hospital workers ,
× RELATED ஒப்பந்த ஊழியரை தாக்கியதாக மருத்துவமனை ஊழியர்கள் சிவகங்கையில் போராட்டம்