×

பெற்றோர் திட்டியதால் மாணவி தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பராங்குசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(48). இவரது மகள் கீதா(17). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தாள். மாணவி படிப்பில் கவனம் செலுத்தாததால் பெற்றோர் அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கீதா நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதைக்கண்ட பெற்றோர், கீதாவை மீட்டு பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் மப்பேடு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆவடி அடுத்த கோயில்பதாகை பூம்பொழில் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(39). ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரளா(35). விஜயகுமார் குடிக்கு அடிமையானதால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருவரையும் உறவினர்கள் சேர்த்து வைத்துள்ளனர். அதன் பிறகும், விஜயகுமார் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, சரளா திருமுல்லைவாயலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். விஜயகுமார், சரளாவை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்து  தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், மனமுடைந்த விஜயகுமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : Student ,suicide ,parents ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...