×

லலிதா ஜூவல்லரியில் கொள்ளை 400 கிராம் நகைகள் மீட்பு: கொள்ளையனுக்கு போலீஸ் வலை

சென்னை: லலிதா ஜூவல்லரியில் கொள்ளை வழக்கில் 400 கிராம் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளையனை தேடி வருகின்றனர். சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜூவல்லரியில்  கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் பிரவீன்குமார் சிங். சமீபத்தில், கடையில் உள்ள தங்க நகைகளை எடைபோடும்போது 5 கிலோ தங்க நகைகள் மாயமானது தெரிந்தது.  இதுகுறித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில்  புகார் செய்யப்பட்டது. விசாரணையில், பிரவீன்குமார் சிங், நகைகளை திருடியது சிசிடிவி கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரவீன்குமார் சிங், திருடிய நகைகளை சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்றுள்ளது தெரிந்தது. அதனடிப்படையில் நகை வாங்கியவர்களிடம் இருந்து 400 கிராம் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். தப்பியோடிய  கொள்ளையன் பிரவீன்குமார் சிங்கை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவரை கைது செய்ய உள்ளதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : jewelery ,robber ,Lalita Jewelery ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை