×

சாலையோரத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது: 6 பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தறிக்கெட்டு ஓடிய அரசு பஸ், சாலையோரத்தில் கவிழ்ந்து, 6 பெண்கள் 20 பேர் காயமடைந்தனர். திண்டிவனத்தில் இருந்து  40 பயணிகளுடன் அரசு பஸ்  நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டது. மரக்காணத்தை சேர்ந்த டிரைவர் ராஜசேகர் (45) பஸ்சை ஓட்டி சென்றார். மதியம் சுமார் 2.30 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அச்சிறுப்பாக்கம் அருகே பெரும் பேர்கண்டிகை  பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தறிக்கெட்டு ஓடி, சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதில் பயணம்  செய்த மக்கள் அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு  அப்பகுதி மக்கள் ஓடிவந்து, பஸ்சில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.

 தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கிராம மக்களுடன் சேர்ந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை, ஆம்புலன்ஸ் மூலம் மேல்மருவத்தூர் மற்றும்   மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளில்  சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : women ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ