×

திருச்சி கலெக்டரிடம் மனு கொடுக்க பாமக பேரணி

திருச்சி, ஜன.30: திருச்சியில் பாமக சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை 11 மணி அளவில் வெஸ்ட்ரி பள்ளி அருகில் இருந்து பாமக மாநகர மாவட்ட செயலாளர் திலீப்குமார் தலைமையில் நிர்வாகிகள் பேரணியாக நடந்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 7 சதவீதம் கூட பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. வன்னியர் சமூகத்தின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. பேரணியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : rally ,Trichy Collector ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி