×

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி திருவாரூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன 30: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திருவாரூரில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட கோரி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணை பொதுச் செயலாளர் வேணுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், உழவர் இயக்க பொறுப்பாளர் பிரபாகரன், இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் நரசிம்மன், சிவகுமார், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஐயப்பன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் கோரிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Tags : Demonstration ,Thiruvarur ,Vanni ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...