×

ஒரத்தநாட்டில் விஏஓக்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஒரத்தநாடு, ஜன.30: ஒரத்தநாடு அடுத்த சோழபுரம் கிராமத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, அங்கு உள்ள விஏஒ முறையாக பணி செய்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தார் கணேஷ்வரனிடம், தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஏஓக்கள், வடகிழக்கு பருவமழை பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடு வழங்குவது குறித்து விஏஓக்கு முறையான சுற்றறிக்கை வழங்காமலும், சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் போதுமான கால அவகாசம் அளிக்காமலும் அவசரகதியில் இரவு பகலாக பணி செய்து மன உளைச்சலை ஏற்படுத்தி ஒரத்தநாடு விஏஓ அலுவலர் ஒருவருக்கு குற்ற குறிப்பாணை வழங்க நினைக்கும் ஒரத்தநாடு தாசில்தாரை கண்டித்து விஏஒக்கள் ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : VOs ,country ,
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...