×

பொன்னமராவதியை தனி கோட்டமாக்க கோரிக்கை

பொன்னமராவதி, ஜன.30:பொன்னமராவதியை கோட்டமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகாவில் 42 கிராம ஊராட்சி, ஒரு பேரூராட்சி உள்ளது. இந்த தாலுகாவின் மக்கள் வருவாய்துறை சம்மந்தமாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இலுப்பூர் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலையுள்ளது. மேலும் சரியான போக்குவரத்து வசதியும் இல்லை. எனவே பொன்னமராவதியினை புதிதாக வருவாய் கோட்டமாக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது பொன்னமராவதி தாலுகா மக்கள் சிரமமின்றி பெற வழிவகை ஏற்படும். எனவே பொன்னமராவதியை புதிதாக கோட்டமாக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnamaravathi ,division ,
× RELATED திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது