×

கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு கேட்டு கரூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன. 30: கரூர் மாவட்ட பாமக சார்பில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நூற்றுக்கணக்கான பாமகவினர், மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் ஊர்வலமாக வந்து, இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து இதே கோரிக்கை கொண்ட மனுவினை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கி விட்டு சென்றனர். பாமகவினர்களின் இந்த மனு கொடுக்கும் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Protesters ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்