×

தங்கை திருமண செலவிற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தற்கொலை கடலூரில் பரிதாபம்

கடலூர், ஜன. 30: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(40), கூலி தொழிலாளி. இவரது பெற்றோர்கள் இறந்த நிலையில் பிரகாஷ் தனது தங்கை உஷாவுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி தங்கை உஷாவிற்கு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையடுத்து தங்கை திருமணத்தை நடத்த செலவிற்கு பணம் இல்லை என பிரகாஷ் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
நேற்று முன் தினம் உஷா வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதியம் வீட்டிற்கு சாப்பிட உஷா வந்த போது அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிரகாஷை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கையின் திருமண செலவிற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : suicide ,Cuddalore ,sister ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!