×

மக்காச்சோளப் பயிரில் ஆய்வு

சிவகாசி, ஜன. 30: சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமத்தில் மக்காச்சோள பயிரில் திருத்தியமைக்கப்பட்ட பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் அறுவடை பரிசோதனை நடந்தது. விவசாயி ராஜாவின் வயலில் நடந்த பரிசோதனையில் சப் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், கலெக்டர் நேர்முக உதவியாளர் நாராயணன், வேளாண்மை உதவி இயக்குநர் ரவி ஆய்வு செய்தனர். வருவாய் துறை அலுவலர்கள், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குகுநர் ரவிசங்கர், வேளாண் அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags :
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...