×

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் உண்ணாவிரதம்

விருதுநகர், ஜன. 30: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழும், சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் அளித்த வாக்குறுதிப்படியும், 2016 தேர்தலில் அதிமுக அளித்த எழுத்துப்பூர்வ தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்தில் அனைத்து துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : CBS ,Abolition Movement Fasting ,
× RELATED கலெக்டர் அலுவலகம் முன்பாக புதிய...