மதுரை, ஜன. 30: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் (சிபிஎஸ்) சார்பில் மதுரை அண்ணாநகரில் நேற்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது. இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரேமா, ஆனந்தி தலைமை வகித்தனர். சரவணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகவரித்துறை ஓய்வுபெற்ற அலுவலர் மற்றும் பணியாளர் நலச்சங்க மாநில தலைவர் கோட்டை ராசு உண்ணாவிரத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார். உண்ணாவிரதத்தில், ‘அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சோலையன், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் சின்னப்பொன்னு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிதி காப்பாளர் சரவணப்பெருமாள் நன்றி கூறினார்.