×

கோயில் திறப்பு விழாவுக்கு வருகை தரும் முதல்வர், துணைமுதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்போம் அமைச்சர் உதயகுமார் பேட்டி

திருமங்கலம், ஜன. 30: திருமங்கலம் அருகே, அம்மா கோயில் திறப்பு விழாவிற்கு வருகை தரும் முதல்வர், துணைமுதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்
தார்.இது குறித்து அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளனர். இவர்களின் புகழை போற்றும் வகையில், ஜெயலலிதா பேரவை சார்பில், திருமங்கலம் டி.குன்னத்தூரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு உரிய அனுமதியும், அங்கீகாரமும் முதல்வரும், துணைமுதல்வரும் வழங்கியுள்ளனர். இக்கோயிலை இன்று திறந்து வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் மதுரைக்கு வருகின்றனர். இவர்களுக்கு ஜெ.பேரவை மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கப்பலூரில் இருந்து அம்மாகோயில் வரையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில், பூரணகும்ப மரியாதை, நாதஸ்வர மேளதாளம், கிராமிய கலைஞர்களின் ஒயிலாட்டம், கரகாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இளைஞர்கள் முதலமைச்சரின் சாதனை பிரசாரங்களை கைகளில் ஏந்தி வரவேற்பு கொடுக்கின்றனர். இதில், அதிமுகவினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும்’ என தெரிவித்தார்.

Tags : Chief Minister ,Deputy Chief Minister ,inauguration ceremony ,Udayakumar ,
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...