×

20 % இடஒதுக்கீடு வழங்க பாமக கோரிக்கை மனு

திண்டுக்கல், ஜன. 30: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அஞ்சலி ரவுண்டானா பகுதியில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் நேற்று காலை திரண்டனர். மாநில துணைச் செயலாளர்கள் ஜோதிமுத்து வெள்ள கோபால் ஆகியோர் தலைமையில்  கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.  இதில் மாவட்ட செயலாளர்கள்  ஜான்கென்னடி, ரவிச்சந்திரன், வைரமுத்து, மாநில செயலாளர் சமூக நீதிப் பேரவை சிவக்குமார், இளைஞரணி அமைப்பாளர் சமூகநீதிப் பேரவை பூமிராஜ் மற்றும்  கிழக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் திருப்பதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் சென்று அதிகாரிகளை சந்தித்து தன்னுடைய கோரிக்கை மனுவை அளித்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு