×

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

செங்கல்பட்டு: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:அரக்கோணம்- செங்கல்பட்டு இடையே காலை 5.35, செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே காலை 8.20, சென்னை கடற்கரை- திருமால்பூர் இடையே மாலை 6 மணி, சென்னை கடற்கரை- காஞ்சிபுரம் இடையே மாலை 6.40, காலை 5.45 மணி, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 4.55, 6.25, 7.05, 7.40 மற்றும் மாலை 3, 3.50, மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் 31ம் தேதி (நாளை) ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று, செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே காைல 7.25, 8.10, 8.50, 9.05, 5, 5.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் 31ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 6, 6.45, 10.35, 11.15, 12, 1, 1.30, 2 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் 31ம் தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை இடையே காலை 7.05, திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே காலை 7.50, செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே காலை 8.30, காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை இடையே காலை 9.45, செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே காலை 10.45, 11, 1.35, 2.15, 3.05, 4.05, 6.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் 31ம் தேதி திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.


Tags : Cancellation ,Southern Railway ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...