×

கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன.30: பதவி உயர்வு உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக சுகாதாரத்துறையில் அரசின் கொள்கை முடிவால் பாதிக்கப்பட்ட 246 சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமை வகித்தார். மேற்கு மண்டல செயலாளர் மணிவண்ணன், மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சசிக்குமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில், நிர்வாகிகள் தங்கராஜ், செல்வம், பிரபாகரன், தீனதயாளன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Demonstration ,Association of Health Inspectors ,
× RELATED தஞ்சாவூரில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்