சேலம், ஜன.30: ஜனவரி 26ம் தேதியன்று, சேலம் மாநகராட்சி சார்பில் குடியரசு தினவிழா நடந்தது. விழாவில் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில், சகோதரத்துவத்தை கடைபிடித்து, பரிசோதனைகள் செய்து சிகிச்சைகள் அளித்து கொரேனாவை ஒழிப்பதற்கு பெரிதும் சிரத்தை எடுத்து வந்த, சேலம் மாநகராட்சி ஊழியர்களுக்கு, தனியார் மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிற்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். இதில் சேலம் மாநகராட்சிக்கு உறுதுணையாக, காவேரி மருத்துவமனை 20க்கும் மேற்பட்ட காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்தி இருந்தது. இதனை பாராட்டும் வகையில், சேலம் சீலநாயக்கன்பட்டி காவேரி மருத்துவமனையின் இயக்கத் தலைவர் செல்வத்திடம், விருது வழங்கி கவுரவித்தனர். ...