×

அகதிகள் முகாமில் தொழிலாளி தற்கொலை

சேந்தமங்கலம், ஜன.30: எருமப்பட்டி  அடுத்துள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் மேத்யூஸ்(56). கூலித்தொழிலாளியான இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது மனைவி,  குழந்தைகளுடன் இலங்கைக்கு சென்று விட்டார். பின்னர் 2018ம் ஆண்டு, இவர்  மட்டும் தமிழகம் திரும்பி வந்து, மேட்டுப்பட்டி முகாமில் வசித்து வந்தார். இவரால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியவில்லை. மனைவி,  குழந்தைகளை பிரிந்த மனவேதனையில் இருந்த மேத்யூஸ், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த  எருமப்பட்டி போலீசார், மேத்யூசின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,refugee camp ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை