காவேரிப்பட்டணம், ஜன.30: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், வழக்கறிஞர் அணி மாவட்ட தேர்தல் களப்பணி அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் விஸ்வபாரதி முன்னிலையில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.