×

கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி, ஜன.30: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி, தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு ஜனவரி 30ம் தேதி விடுமுறை தினம் என்பதால், நேற்று (29ம்தேதி) கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ சதீஸ், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் முத்துச்செல்வன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பரமசிவம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கோவிந்தன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Collector's Office ,
× RELATED அரசு பொது நிலங்களில் உள்ள சீமை கருவேல...