தர்மபுரி, ஜன.30: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று விநாயகர் ரத தேரோட்டம் நடந்தது. குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில், கடந்த 23ம் தேதி தொடங்கிய தைப்பூச திருவிழாவில், 28ம் தேதி காலை பால்குடம் ஊர்வலமும், அன்றிரவு சுவாமி திருக்கல்யாணமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, நேற்று (29ம் தேதி) மாலை 5 மணிக்கு விநாயகர் ரத தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று(30ம் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் மகாரத திருத்தேர் திருவிழா நடக்கிறது.