×

திருமங்கலம் ஊராட்சியில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம்

லால்குடி, ஜன.29: லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு திறந்து வைத்தார். லால்குடி ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் செலவில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் குடியிருப்பு திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். திமுக திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் செல்வநாயகம், மாவட்ட கவுன்சிலர் ஆதிநாயகி ரவி, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் திமுக முதன்மை செயலாளரும் எம்எல்ஏவுமான கே.என்.நேரு கலந்து கொண்டு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், டாக்டர்கள் ஜெயந்த்முரளி, சதீஷ், மாவட்ட துணை செயலாளர் துரைகந்தசாமி, நகர செயலாளர் துரைமாணிக்கம், திருமங்கலம் ஊராட்சி உறுப்பினர்கள், துணை சுகாதார பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ஊராட்சி தலைவர் கலாதேவி அண்ணாதுரை வரவேற்றார். துணைத் தலைவர் ராஜகோபால் நன்றி கூறினார்.

Tags : Primary Health Center ,Thirumangalam Panchayat ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு